அஸ்ஸலாமு அலைக்கும் {வரஹ்}

Monday, June 22, 2009

உனை மறவா இதயம் வேண்டும்

இறைவா ஒரு நொடியும் உனை
மறவா இதயம் வேண்டும்
ஒருபோதும் உன் கட்டளையை
மீறாத வாழ்வு வேண்டும் .

உலகை விரும்பாத மனம் வேண்டும்
மறுமையை குறிக்கோளாய் வாழ வேண்டும்
கோபமும் காமமும் அகல வேண்டும்
அனைவரையும் உயர்வாக மதிக்க வேண்டும்

இருப்பதில் இன்பமாக வாழ வேண்டும்
பொறுமை அமைதி சாந்தி
சமாதானம் என்னில் நிறைய வேண்டும்
முகத்திற்கு முன்னால் புகழும் மனிதனிடம்
பாதுகாப்பை நீ தர வேண்டும்
குறைகளை எடுத்துச் சொல்லும் -நல்ல
நண்பன் அருகில் வேண்டும்

உனக்கு அடிபணிவதில் எனக்கு
பெரும் இன்பம் கிடைக்க வேண்டும்
முன்னால் செய்த பாவங்கள் அனைத்திற்கும்
முழுமையான மன்னிப்பை நீ தர வேண்டும்
பாவமில்லாத பரிசுத்தமான வாழ்வே
இனி வேண்டும்
அனைவருக்கும் உதாரணமாய்
என் வாழ்வு அமைய வேண்டும்
இறக்கும்போது கலிமாவை நான்
மொழிய வேண்டும் -மறுமையில்
இனிய பரிசாக இன்பம் நிறைந்த சொர்கத்தை
நீ எனக்கு தந்தருள் புரிய வேண்டும் .

நன்றி :

0 Comments: